மஹிந்தவின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு 10 வீடுகளை வழங்க நாட்டு மக்கள் தயாராகவுள்ளனர் ; ஷாமர சம்பத்

21 Jan, 2025 | 05:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை இல்லாமலாக்கினால் அவரின் பாதுகாப்புக்காக தெற்கில் இருந்து மக்கள் வருவார்கள். 

அதேபோன்று அவரின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு 10 வீடுகளை வழங்க இந்த நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் ஜனாதிபதி துன்முல்லே விமலே போன்று செயற்படக்கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஷாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி களுத்தறையில் பேசிய விடயம் தொடர்பில் சமூகவலைத்தலங்களில் தெரிவிக்கப்படும் விடயங்களை பாருங்கள். மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்பட்டிருக்கும் வீட்டை முடியுமானால் 44 இலட்சம் ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கிக் காட்டுங்கள்.

 காெண்டை கட்டிய சீனர்களுக்குதான் 44 இலட்சத்துக்கு அந்த வீட்டை வழங்க முடியும். மஹிந்த ராஜபக்ஷ்வின் வீட்டை முடியுமானால் மீள பெற்றுக்காெள்ளுங்கள். 

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒன்றுக்கு 10 வீடு வழங்குவதற்கு இந்த நாட்டில் மக்கள் இருக்கிறார்கள். அவரின் பாதுகாப்பு தரப்பினரை அகற்றினால் அவருக்கு பாதுகாக்கு வழங்க தெற்கில் இருந்து மக்கள் வருவார்கள்.

சந்திரிகா குமாரதுங்க குடும்பம்தான் இந்த நாட்டுக்கு அவர்களின் குடும்ப காணிகளை பகிர்ந்து வழங்கியவர்கள்.

அதனால் சந்திரிகா குமாதுங்க தனது உத்தியோகபூர்வ வீட்டில் இருந்து வெளியேறியதனால் அவர்களின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை. 

மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் இந்த நாட்டுக்கு சேவை செய்தவர்கள். அதனால் ஜனாதிபதி தும்முல்லை விமலே போன்று கதைக்கக்கூடாது. 

எங்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் தேவையில்லை. ஆனால் இன்னும் 6 மாதங்களில் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும். 

அதனால் ஒழுக்கம் தொடர்பில் கதைப்பவர்கள். பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

கிளீன் சிறிலங்கா ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நான் ஆரம்பத்திலே தெரிவித்திருந்தேன். 

அதனை தற்போது தெரிவிக்கிறேன். ஆனால் இந்த விடயத்தை நான் தெரிவித்த மறுநாளே ஜனாதிபதி செயலாளர் பிரதம கணக்காளர் குமாரசிங்க மற்றும் கணக்காய்வாளரை அழைத்து கலந்துரையாடி, இந்த செலவை 9 இலட்சமாக அமைத்தார்கள். நான் இந்த விடயத்தை கதைத்ததால் அரசாங்கத்துக்கு 61இலட்சம் ரூபா மீதமாகியது.

அத்துடன் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் அல்லது. இந்த வேலைத்திட்டம் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இந்த காலப்பகுதியில் நாட்டில் 10 துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் 7 மரணங்களும் இடம்பெற்றுள்ளன. வரலாற்றில் அதிக துப்பக்கி சூடு இடம்பெற்றிருப்பது இந்த காலப்பகுதியிலாகும். 

இவையும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சுதந்திரமாக நடமாட முடியுமான சூழல் ஏற்படுகிறது. 

அதனால் கிளீன் சிறிலங்கா மூலம் முதலாவது பாதால கோஷ்டி, போதைப்பாெருள் வியாபாரங்களை தூய்மைப்படுத்த வேண்டும். அதன் பின்னர் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண்...

2025-02-08 12:26:54
news-image

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,...

2025-02-08 12:18:00
news-image

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-02-08 11:58:07
news-image

குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-02-08 12:12:59
news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57