22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் டெங்கு அதி உயர் அபாயம் மிக்க வலையங்களாக அடையாளம்

20 Jan, 2025 | 11:08 PM
image

(செ.சுபதர்ஷனி)

சீரற்ற கால நிலையோடு நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை தொடர்ந்து 22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) டெங்கு அதி உயர் அபாயம் மிக்க வலையங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

இம்மாதம் 19 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 185 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாத்திரம் 168 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. 

அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளது. 

டெங்கு பரவலை கருத்தில் கொண்டு 22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இரண்டாக ஆக உயர்வடைந்துள்ளது. எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. 

கம்பஹா (482), கொழும்பு (433), கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதி (411), காலி (197), கண்டி (192), மட்டக்களப்பு (181), இரத்தினபுரி (169) மற்றும் யாழ்ப்பாணம் (126) ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.

முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆகையால் இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயற்பட வேண்டும்.

 வீட்டு சூழல், வழிப்பாட்டுத் தளங்கள், பாடசாலை வளாகம், வர்த்தக நிலையங்கள், கைவிடப்பட்ட காணிகள், கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களில் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நுளம்புகள் அதிகளவில் பரவுகின்றன.

ஆகையால் வாராந்தம் இருமுறை வீடு உட்பட சுற்றுப்புற சூழலை 15 நிமிடங்கள் தூய்மை படுத்துவதன் மூலம் டெங்கு பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். 

மேலும் பொதுமக்கள் டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண்...

2025-02-08 12:26:54
news-image

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,...

2025-02-08 12:18:00
news-image

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-02-08 11:58:07
news-image

குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-02-08 12:12:59
news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57