மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இரங்கல்

Published By: Digital Desk 2

20 Jan, 2025 | 11:15 PM
image

மூத்த பத்திரிகையாளரும், தமது சங்கத்தின் உறுப்பினருமான விக்டர் ஐவனின் மறைவு தொடர்பில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது. 

பிரபல பத்திரிகையாளர் விக்டர் ஐவன் அவரது 75 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (19) காலமானார். அவரது மறைவு தொடர்பில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அனுதாபச்செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவன் இலங்கை சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னரங்க செயற்பாட்டாளர்களில் ஒருவராவார். 

ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து "ஊடக சட்ட மறுசீரமைப்பை" வலியுறுத்தி பிரசாரத்தை ஆரம்பித்த வேளையில் "ராவய" பத்திரிகையின் ஆசிரியர் என்ற ரீதியில் விக்டர் ஐவன் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தில் இணைந்துகொண்டார். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தினால் விக்டர் ஐவனுக்கு எதிராக சில வழக்குகள் தொடரப்பட்டன. இருப்பினும் விக்டர் ஐவன் அவ்வழக்குகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குக் கொண்டுசென்றார். அதுகுறித்து ஆராய்ந்த குழு, இவ்வாறான தொடர் வழக்குகள் மூலம் விக்டர் ஐவனின் மனித உரிமைகளை மீறியமைக்காக இலங்கை அரசாங்கம் அவருக்கு நட்ட ஈடு செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது. 

அதோபோன்று ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப்பொறுப்பு தொடர்பான கொழும்பு பிரகடனம் கைச்சாத்திடப்படுவதற்கு வழிகோலிய சர்வதேச மாநாட்டை 1998 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்துவதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்தவர்களில் விக்டர் ஐவன் மிகமுக்கியமானவராவார். 

பின்னாளில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலம் தொடர்பில் "Choura Rajini" எனும் தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்ட விக்டர் ஐவன், சமூக - அரசியல் செயற்பாடுகளில் மிகுந்த முனைப்புடன் பங்கெடுத்துக்கொண்டார். 

அதுமாத்திரமன்றி பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அயராது பாடுபட்ட அவருக்கு இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் "சேபால குணசேன விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில்...

2026-05-21 16:09:37
news-image

தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு...

2026-05-21 16:15:45
news-image

மலையக மக்கள் இன்னும் நவீன கொத்தடிமைகளே...

2026-05-21 19:02:12
news-image

சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று...

2026-05-21 16:18:33
news-image

பதில் ஆசிரிய ஆலோசகர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்...

2026-05-21 16:25:40
news-image

கல்வி மறுசீரமைப்பு முற்றாக முடக்கம்; அமைச்சு...

2026-05-21 16:29:11
news-image

வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள்...

2026-05-21 19:01:23
news-image

அந்தந்த காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம்...

2026-05-21 18:59:26
news-image

கோட்டாபயவின் பாதையில்தான் அநுரவும் பயணிக்கிறார்; டொலர்...

2026-05-21 16:33:18
news-image

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனாவுக்கு...

2026-05-21 16:30:55
news-image

சமூக ஊடக சர்ச்சை: வதந்திகளுக்கு சர்வஜன...

2026-05-21 17:05:56
news-image

டொலரின் பெறுமதி, இறக்குமதி பொருட்களின் விலை...

2026-05-21 16:59:29