போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது

Published By: Digital Desk 2

20 Jan, 2025 | 04:47 PM
image

போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 21 மற்றும் 23 வயதுடைய ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஆவர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது, 

சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் தங்களது கஸகஸ்தான் கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இருவரும் சமர்ப்பித்த கடவுச்சீட்டுகள் குறித்து சந்தேகமடைந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கடவுச்சீட்டுகளை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, இந்த கடவுச்சீட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களின் பயணப்பொதிகளிலிருந்து ஆப்கானிஸ்தான் கடவுச்சீட்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்பதற்கு முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் குவைத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 09:29:03
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28