தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (21) ஆஜராகவுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று திங்கட்கிழமை (20) அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தன்னை முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தொடர்பான வழக்கு நீதிமன்றில் இன்றைய தினம் அழைக்கப்பட்ட போது மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த அறிவித்தலை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் இந்த மனு தொடர்பான ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்கு அழைக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த மனு தொடர்பான ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு மீண்டும் அழைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM