நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் வேளையில் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர் வீதியில் ஊடுருவி கடந்து செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கந்தபளை பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மரக்கறி வகைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாததே, இப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு விவசாய நிலங்கள் அழிந்து, மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக நுவரெலியாவில் பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும்போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிப்பதன் மூலம் விபத்துகளை தவிர்த்துக்கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM