திருக்கோ T20 லீக் 2025இல் மூன்றாவது பருவத்துக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (18) திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்த பருவத்தில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் 2025ஆம் ஆண்டின் இன்று தொடக்கம் (18,) 19, 24, 25 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
திருக்கோ சூப்பர் 40 கிரிக்கெட் கிளப் இந்த போட்டியை ஒழுங்கமைக்கிறது. இந்த லீக், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த T20 லீக், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், இளம் வீரர்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பாக உள்ளது. அவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, எதிர்காலத்தில் பெரிய அணிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை பெறலாம்.
திருக்கோ T20 லீக் 2025, கிரிக்கெட் உலகில் ஒரு முக்கியமான நிகழ்வாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் சண்முகம் குகதாசன் கருத்து தெரிவிக்கையில்,
விளையாட்டு என்பது விரும்பியபடி ஆடுவது என்று பொருள்படும். அன்றைய காலத்தில் 56 விளையாட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்ட வீரர்கள் மாவட்ட மாகாண தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பிக் போட்டி வரை தங்களது வெற்றிகளை நிலைநாட்ட வேண்டும். இதற்காக சகல உதவி ஒத்தாசைகளையும் வழங்குவேன். விளையாட்டு மூலம் உடற்பயிற்சி, உற்சாகம் என்பனவும் உடலுக்கு ஏற்படுகிறது. இதனை திறம்பட பயன்படுத்திக் காட்ட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM