சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இருவர் கைது!

18 Jan, 2025 | 06:15 PM
image

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீட்புரம் சந்தியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இருவரை சம்மாந்துறை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர். 

சடந்தலாவை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரும் மஜீட்புரம், மல்வத்தை 03 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மஜீட்புரம் சந்தியில் கடமையிலிருந்த வேளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டபோது சந்தேக நபர்களுக்கு 35,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14