மாத்தறை பகுதியில் 900 மில்லி கிராம் ஹெரோயின், உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (17) மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மாத்தறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 900 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொக்குனுஹேன பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்க பெற்ற தகவல்களின் அடிப்படையில் மாத்தறை, வெவஹமந்துவ பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சோதனையிடப்பட்டது.
இதன்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள் மற்றும் 60 தோட்டாக்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM