டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகள் குறித்து மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என தெரிவித்துள்ள சிஎன்என் டிரம்பின் குழுவினர் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது.
சிஎன்என் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மிகக்கடுமையான குடியேற்ற உத்தரவுகளை டிரம்பின் குழுவினர் உருவாக்கிவருகின்றனர்.
இந்த உத்தரவுகள் அமெரிக்க மக்களிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என விடயமறிந்த இரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டிரம்பின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் குடியேற்றகொள்கையில் பாரிய மாற்றத்தை கொண்டிருக்கும் மேலும் அமெரிக்காவில் ஏற்கனவே வசிக்கும் அமெரிக்கர்கள் அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் குடியேற்றவாசிகளை இலக்குவைத்து அமெரிக்க குடிவரவுதுறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்,பென்டகனின் வளங்கள் அமெரிக்காவின் தென்பகுதி எல்லைக்கு அனுப்பப்படும், மேலும் அமெரிக்க எல்லைக்குள் நுழைய தகுதியானவர்கள் யார் என்பது குறித்து மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
டிரம்ப் ஜோபைடன் காலத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைகளை கைவிடுவார்.
குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் வெளியாகும்,கைதுகள் இடம்பெறுவது குறித்த தகவல்கள் வெளியாகும், என சிஎன்என்னிற்கு விடயமறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM