25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளி ; கஜேந்திரகுமார் நம்பிக்கை

18 Jan, 2025 | 11:17 AM
image

(எம். நியூட்டன்) 

தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையின் ஆரம்பப் புள்ளியாக, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.   

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்ததாவது:

சில கட்சிகள், தங்களது தேவைக்காக அல்லது புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்து, தனித்து செயல்பட முயல்கின்றன. 

ஆனால், கடந்த பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற குழுத் தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடந்தது. அது, அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கவேண்டிய நோக்கில் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில், பாராளுமன்ற குழுத் தலைவர்களைத் தாண்டி, கட்சியின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதோடு, இனப்பிரச்சினை தொடர்பாக அறிவியல் மற்றும் அதிகார ரீதியான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நபர்களையும் இணைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 

இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். கட்சி ரீதியாக பேசப்பட்டு, ஒருமித்த முடிவுக்கு வரவேண்டியது அவசியம். 

நாம் கலந்துரையாடிய பிறகு, கட்சியின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதே முறையாகும். எந்த ஒரு குழுவும் கட்சியின் அனுமதியின்றி செயல்படக்கூடாது.

எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் சந்திப்பு, தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும். அரசாங்கம் தனது வசதிக்கேற்ப தமிழ்த் தேசிய அரசியலை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தும் தரப்புக்கள் ஒன்று கூட வேண்டும். 

தமிழர்களின் பாரம்பரிய அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மதிக்க வேண்டும். தமிழ் தேசிய அரசியல், உரிய கௌரவத்துடன், எதிர்காலம் நோக்கி முன்னேற, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனை உணர்ந்து செயற்படுவதற்காகவே, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.  

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 10:07:00
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28