மாத்தறை, கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்சேகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கம்புறுபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் மாத்தறை, ரன்சேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த வீட்டின் பெண் உரிமையாளர் நபரொருவருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.
சம்பவத்தன்று, வீட்டின் பெண் உரிமையாளருக்கும் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, வீட்டின் பணியாளரும் அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரும் இணைந்து தகராறில் ஈடுபட்ட இருவரையும் சமரசம் செய்ய முயன்றுள்ளனர்.
பின்னர், தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் வீட்டின் பெண் உரிமையாளரையும் பணியாளரையும் அயல் வீட்டில் வசிக்கும் பெண்ணையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த வீட்டின் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், காயமடைந்த வீட்டின் பெண் உரிமையாளரும் அயல் வீட்டில் வசிக்கும் பெண்ணும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்புறுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM