போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Published By: Digital Desk 7

17 Jan, 2025 | 05:32 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

போதைப்பொருளை தடுக்கும்  வகையில் தேசிய அளவிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

போதைப்பொருளை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.அது தொடர்பில் மக்களுக்கு நாம் சரியான தகவல்களை சிறந்த முறையில் வழங்கி வருகிறோம்.

சில தகவல்களை வழங்குவதற்கான நம்பகத்தகுந்த ஏதுவான சூழல் கட்டமைப்பு தற்போது இல்லை. எனினும் நாம் இது தொடர்பில் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமைத்துவத்தின் கீழ் வடமேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்படாத பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக எதிர்வரும் ஒருவார காலப்பகுதிக்குள் இந்த குற்றத்தடுப்பு பிரிவு நிறுவப்படவுள்ளது.

20 ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு அறிவித்தன் பின்னர் இதனை நிறுவ நடவடிக்கை எடுப்போம். இவற்றின் ஊடாக பல விடயங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிச் சடங்கு நிகழ்வில் கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-02-12 10:12:15
news-image

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர்...

2025-02-12 10:15:09
news-image

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் 

2025-02-12 09:53:34
news-image

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

2025-02-12 09:57:38
news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

டான் ப்ரியசாத்துக்கு விளக்கமறியல்

2025-02-12 09:52:23
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08