மட்டக்களப்பில் விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் அதிகம் ; அரிசியை இறக்குமதி செய்யும் நிலையை நாம்  மாற்ற வேண்டும் - கந்தசாமி பிரபு எம்.பி.

17 Jan, 2025 | 02:02 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் அதிகம் உள்ளன. கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. எனினும், தற்போது நாம் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

மட்டக்களப்பு மாவட்டத்தில்  விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் அதிகம் உள்ளன. நீர்ப்பாசன திட்டங்களில் சில குறைபாடுகள் இருப்பதனால் பெரிய நீர்ப்பாசன திட்ட வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. 

முந்தனையாறு திட்டத்துக்கு குறைந்த அளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்கியிருந்தபோதும் அத்தகைய திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் கைவிடப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்த சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் தற்போது நாம் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றையெல்லாம் மாற்றி எமது வளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும்.

எமது அரசாங்கத்தின் நோக்கமான “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் ஊடாகவும் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம் மட்டுமன்றி, சமூகத்தில் கட்டமைப்பை உருவாக்கி நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எமது வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். 

பொருளாதாரத்தில் பின் நின்ற அரசாங்கத்தை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அதனூடாக எமது நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம்.

மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் கட்டடங்களை புனரமைத்து அறுவடை செய்கின்ற வேளாண்மையை களஞ்சியப்படுத்தவேண்டிய நிதிகளை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அவற்றுக்கான வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்படவுள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10
news-image

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை:...

2026-04-20 09:46:40
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14