வெல்லம்பிட்டிய - மீதொட்டமுல்ல பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை (16) வெலிகந்த பொலிஸ் பிரிவில் ருஹூணுகெத பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருஹூணுகெத, வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடை சிவில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிவரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேநபரிடமிருந்து T56 ரக துப்பாக்கியுடன் தோட்டா பை மற்றும் 18 தோட்டாக்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்ற அனுமதியுடன் சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக வெல்லம்பிட்டிய பொலிஸார் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், குறித்த சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM