துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை பரிசோதனை செய்து விடுவிக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. விடயத்துக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் துறைமுக நிலைமைய கண்காணிக்க வந்தபோது, கொழும்பு துறைமுகத்துக்கு வந்த 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
ஆனால் 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
துறைகத்தில் இருந்து விடுவிக்கும் பொருட்களை கொண்டுசெல்ல வந்திருக்கும் பார ஊர்திகள் பல நாட்களாக வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறன.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி துறைமுக அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்கள அதிகாரிகளை சந்தித்து, துறைமுக ஊழியர்கள் 24 மணிநேரம் வேலை செய்து பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஆனால் கலந்துரையாடல் இடம்பெற்று ஒருவார காலம் கடந்துள்ள நிவையில் இன்னும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் போயிருப்பதால் 17 கொள்கலன்கள் துறைமுகத்துக்குள் இறுகி இருப்பதாக வெளிவரும் தரவுகள் மூலம் தெரியவருகிறது. அதேபோன்று கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM