(எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லாமையால் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதனால் மிகக் குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி திகழ்ந்து வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களை கடந்துள்ள நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற அவர்களுக்கு முடியாமல் போயிருக்கிறது. அதேநேரம் அரச துறைகள் அனைத்தும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன. மக்களுக்கும் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு சிறந்த உதாரணம்தான் தற்போது நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்றுவரும் கூட்டுறவு சங்க தேர்தலாகும். அதிகமான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM