புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

16 Jan, 2025 | 04:54 PM
image

ம்மில் சிலருக்கு தொடை பகுதியிலும், தோல் மடிப்பு பகுதியில் கொப்புளங்கள் தோன்றக்கூடும். அந்த கொப்புளங்களில் திரவம் நிறைந்திருக்கும். இதனை மருத்துவ மொழியில் புல்லஸ் பெம்பிகொய்ட் (Bullous Pemphigoid) என குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற கொப்புளங்கள் ஏற்பட்டிருக்கும் பகுதியில் சிலருக்கு அரிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு வலியும் உண்டாகும். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தொடை மற்றும் அக்குள் பகுதியில் சிலருக்கு திரவம் நிறைந்த கொப்புளங்கள் தோன்றும். இத்தகைய அரிய பாதிப்பு சிலருக்கு சில மாதங்களுக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். வேறு சிலருக்கு இத்தகைய திரவம் நிறைந்த கொப்புளங்கள் குணமடைய ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். அரிப்புடன் கூடிய வலி மற்றும் அசௌகரியமான உணர்வு ஆகியவற்றின் காரணமாக இவற்றுக்கு சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.

தோல் பகுதியில் அரிப்பு ஏற்படுவது, சிறிய அளவிலான கொப்பளங்கள் உண்டாவது,  சில இடங்களில் எளிதில் உடையாத அளவில் சற்று பெரிய கொப்புளங்கள் உருவாவது, வலி, அரிப்பு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். சிலருக்கு மிக அரிதாக வாய் பகுதியிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இவை தொற்று பாதிப்பு அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் நோய் எதிர்ப்பு திறன் தவறுதலாக எம்முடைய திசுக்களின் ஒரு அடுக்கினைத் தாக்கும்போது இத்தகைய பாதிப்பு உண்டாகிறது என மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். அதே தருணத்தில் புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு பக்க விளைவாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம் என்றும், சொரியாசிஸ் டிமென்ஷியா, பார்க்கின்சன், பக்கவாதம் ஆகிய பாதிப்பிற்கும்.. இந்த புல்லஸ் பெம்பிகாய்டு எனும் தோல் பாதிப்பிற்கும் தொடர்பு உண்டு என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இதுபோன்ற அரிய தோல் பாதிப்பிற்கு குருதி பரிசோதனை, தோல் திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்கான பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் தருகிறார்கள். தற்போதைய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவத் தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்டிருக்கும் மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கான முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. சிலருக்கு இத்தகைய மருந்தியல் சிகிச்சை ஓராண்டு வரை கூட நீடிக்கும். இந்தத் தருணத்தில் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிந்துரைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

- வைத்தியர் தீப்தி

தொகுப்பு : அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பியோஜெனிக் கிரானுலோமா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-02-15 18:38:50
news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14