இஸ்ரேலும் ஹமாசும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்த ஒருசில மணித்தியாலங்களில் காசா நகரை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஷேக்ரட்வானிற்கு அருகில் உள்ள குடியிருப்பு தொகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அருகில் உள்ள மற்றுமொரு குடியிருப்பு பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 15பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதையும்,உடல்கள் காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மற்றுமொரு வீடியோவில் காயமடைந்த சிறுவனை மீட்பு பணியாளர்கள் வைத்தியாசாலைக்கு கொண்டு செல்வதையும்,சிறுவர்கள் சிகிச்சை பெறுவதையும் காணமுடிந்துள்ளது.
அல்ரிமாலில் கட்டிடமொன்று இஸ்ரேலின் தாக்குதலில் இடிந்துவிழுந்ததால் 5 கொல்லப்பட்டு;ள்ளனர்.
காயமடைந்த பலர் காசாநகரில் உள்ள அல்அஹ்லி பப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்என மருத்துவமனையின் இயக்குநர் படெல்நைம் தெரிவித்துள்ளார்.
யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரான 70 மணித்தியாலங்களும் காசா மக்களிற்கு மிகவும் வன்முறையானதாகவும் வேதனை மிக்கதாகவும் காணப்படும் காசாமீதான தாக்குதல்கள் நிற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவது குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள போதிலும்,தாக்குதல்கள் தொடர்கின்றன,என தெரிவித்துள்ள அல்அஹ்லி பப்டிஸ்ட் மருத்துவமனையின் இயக்குநர் ஆக்கிரமிப்பாளர்கள் காசா நகரத்தின் மீது தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்,முடிந்தளவிற்கு சேதத்தை ஏற்படுத்தும் முயற்சி போல இது தோன்றுகின்றதுஎன குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM