சட்டவிரோதமாக கெப் வாகனத்தில் மாடுகளை கொண்டு சென்ற நால்வர் கைது

16 Jan, 2025 | 03:11 PM
image

பதுளை, துன்ஹிந்த பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாடுகளை கெப் வாகனத்தில் கொண்டு சென்ற நான்கு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை, மஹியங்கனை பிரதேசத்தில் வசிக்கும் 30, 34, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் ஆவர். 

மஹியங்கனை - பதுளை வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பதுளை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் வாகனம் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர்.

இதன்போது,கெப் வாகனத்தின் சாரதி பொலிஸ் உத்தரவையும் மீறி வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளார். 

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து கெப் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் பதுளை, துன்ஹிந்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது, கெப் வாகனத்திலிருந்து 06 மாடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவது தான் இலக்கு...

2025-03-23 06:37:02
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு!

2025-03-23 06:37:30