நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திஹாரிய பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மாட்டிறைச்சி கடையின் உரிமையாளர் உட்பட மூவர் நிட்டம்புவ பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்திஹாரிய, ருக்கஹவில மற்றும் கஹடோவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58, 65 மற்றும் 70 வயதுடையவர்கள் ஆவர்.
இந்த மாட்டிறைச்சி கடையிலிருந்து உயிருள்ள மாடொன்றும், இரு மாடுகளின் இறைச்சிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM