வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் புதன்கிழமை (15) இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன் வினோசித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வாழைச்சேனை கிரான் வீதியிலுள்ள ஜஸ்பக்றரிக்கு அருகாமையிலுள்ள மதுபானசாலை ஒன்றில் இருந்து சம்பவதினமான இரவு 8.30 மணிக்கு வீடு செல்வதற்காக வீதிக்கு நடந்து வந்த நிலையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் வீழந்து சம்பவ இடத்திலே உயிரிழந்ததையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் அதனை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் கைவிட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM