வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் - ரவிகரன் எம்.பி காட்டம்

Published By: Vishnu

16 Jan, 2025 | 02:58 AM
image

வனவளத் திணைக்களம் மக்களிடமிருந்து களவாடிய காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மான்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் புதன்கிழமை (15) இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முசலிப் பிரதேசசெயலகப்பிரிவில் பெருமளவான மக்களின் காணிகள் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிராமமட்ட பொது அமைப்புக்களால் குறித்த கூட்டத்தில் முறையீடுசெய்யப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை முசலிப் பிரதேசசெயலகத்தால் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதியுடன் வனவளத் திணைக்களத்திடமிருந்து 3510ஏக்கர் காணிகளும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து 1110ஏக்கர் காணிகளும் விடுவித்துத் தரும்படி கோரப்பட்டுள்ளதாகவும் இதன்போது முசலிப் பிரதேசசெயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பிரதேசசெயலர், கிராமஅலுவலர், காணி உரிமையாளர்களுக்குத் தெரியாமல், வனஇலாகா தமது எல்லைக்கற்களை இட்டு மக்களின் காணிகளை அபகரித்துவருகின்றது.

அத்தோடு வனஜீவராசிகள், தொல்லியல் திணைக்களத்தினர், படையினர் என பல்வேறு திணைக்களங்களும் இவ்வாறு எமது மக்களின் காணிகளை அபகரிப்புச்செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில் மிக அதிகளவான மக்களின் காணிகளை வனவளத்திணைக்களம் அபகரித்துள்ளது.

இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும், அதேபோல் நாம் இது தொடர்பில் ஜனாதிபதியுடனும், உரிய ஏனைய தரப்புக்களுனும் பேசத் தயாராக இருக்கின்றோம்.

வனவளத் திணைக்களத்தின் அபகரிப்புச் செயற்பாடே மிக மோசமாகக் காணப்படுகின்றது. எனவே வனவளத்திணைக்களம் மக்களிடமிருந்து திருடிய காணிகளை முதலில் விடுவிக்கப்படவேண்டும் - என்றார்.

இதன்போது குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கிராமமட்ட பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கருத்தை கைதட்டி வரவேற்றனர்.

இதன்போது முசலிப் பிரதேசசெயலர் கருத்துத் தெரிவிக்கையில்,

இடப்பெயர்விற்கு முன்னர் மக்களால் பயன்படுத்தப்பட்டு, இடப்பெயர்விற்குப் பின்னர் வனஇலாகவால் கையகப்படுத்தப்பட்டு விடுவிக்கப்படவேண்டிய மக்களின் காணிகள், எதிர்காலத்தில் மக்களின் குடியிருப்புத் தேவை, மக்களின் விவசாயத் தேவை, மேச்சல் தரவை, ஏனைய பொதுத் தேவைகள் கருதி மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதியோடு வனவளத் திணைக்களத்திடமிருந்தும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்தும், முசலி பிரதேச செயலகம் உள்ளிட்ட மன்னாரின் ஏனைய பிரதேசசெயலகங்களாலும் காணிகள் விடுவித்துத் தரும்படி கோரப்பட்டுள்ளது.

அந்தவகையில் முசலி பிரதேசசெயலர் பிரிவில் வன இலாகாவிடமிருந்து 3510ஏக்கர் காணிகளும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து  1110 ஏக்கர் காணிகளும் உரிய முறையில் களவிஜயம் செய்து, அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு  காணிகளை விடுவித்துத் தரும்படி கோரப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் பேசி இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் முசலிப் பிரதேசசெயலாளர் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20