இன்றைய திகதியில் எம்மில் பலரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டோம். தந்தை, தாய், மகன், மகள் என அளவான குடும்பத்தை திட்டமிட்டு, வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இதில் சித்தப்பா, பெரியப்பா, மாமா, மாமி, அப்பம்மா, அப்பப்பா, அம்மாப்பா, அம்மம்மா, தாய்மாமன், அண்ணி, அண்ணன், கொழுந்தியாள் என ஏராளமான உறவுகளை சமூக நல்லிணக்கம், சமூக மேம்பாடு, ஆரோக்கியம், விலைவாசி உயர்வு என பல சமூக பொருளாதார காரணங்களால் குடும்பத்தின் அமைப்பையும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாம் சுருக்கி கொண்டிருக்கிறோம். இருந்தாலும் அன்பை பகிர்வதிலும், அன்பு செலுத்துவதிலும் நாம் என்றைக்கும் எம்முடைய பாரம்பரிய குணத்தையே கொண்டிருக்கிறோம்.
இதற்காக எம்முடைய முன்னோர்கள் காட்டிய வழிதான் செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்ற கோட்பாடு. இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுக்கு நாளாந்தம் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு செல்ல பிராணிகளை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதிலும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல பயனுள்ள குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக செல்லப் பிராணிகள் எம்முடன் உரையாடவில்லை என்றாலும், எம்முடைய உணர்வுகளையும் , மனநிலையையும் துல்லியமாக அவதானித்து, அதில் இருந்து வெளியே வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் குணம் கொண்டவை. இதன் காரணத்தினாலேயே நாய் -பூனை- கிளி- என ஏராளமான செல்லப் பிராணிகளை ஆர்வத்துடன் வளர்க்கிறார்கள். ஆனால் இதனை எப்போது வாங்க வேண்டும் என்பதில் அறியாமை இன்னும் நீடிக்கிறது. பெரும்பாலானவர்கள் செல்லப்பிராணியை குட்டியாக இருக்கும் போதே வாங்கி விடுகிறார்கள். அதன் மீது அன்பு செலுத்தி வளர்க்கவும் தொடங்கி விடுகிறார்கள். ஆனால் இதற்கும் நாள் , நட்சத்திரம் உண்டு.
அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் எம்முடைய ஆன்மீக முன்னோர்களின் கூற்றுப்படி சம நோக்கு நட்சத்திரங்கள் என்றும், திரியக்முக் நட்சத்திரங்கள் என்றும் இவை சம நோக்கு நாட்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் நீங்கள் உங்களுடைய விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகளை வாங்கலாம். இந்த பிரத்யேக நட்சத்திர நாளில் வாங்கும் செல்லப்பிராணிகளுக்கும் உங்களுக்கும் இடையேயான உறவு உணர்வுபூர்வமானதாகவும், விவரிக்க இயலாத தனித்துவமான தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
இந்த நாட்களில் செல்லப்பிராணியை மட்டும் அல்லாமல் உங்களுக்காக உழைக்கும் துவி சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கலாம். மேலும் காமதேனு என்று குறிப்பிடப்படும் பசுவையும் இந்த நாட்களில் வாங்கி எம்முடைய வீடுகளுக்கு அழைத்து வந்தால் செல்வ வளம் பெருகுவதுடன் ஐஸ்வரியங்களும் வளரும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM