புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும் சிவப்பரிசி இல்லை ; அநுராத தென்னகோன்

15 Jan, 2025 | 04:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோகிராம் பச்சையரிசியை இலவசமாக விநியோகித்ததால் சந்தையில் சிவப்பு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிடுவது முற்றிலும் பொய்.

அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார் என தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அநுராத தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும் சிவப்பரிசி இல்லை.  

விவசாயம் செழிப்பதற்காகவே  இந்துக்கள் புத்தரிசியில் பொங்கல் பொங்குவார்கள். ஆனால் இம்முறை பெரும்பாலான பகுதிகளில்  சிவப்பரிசிக்கு தட்டுப்பாடு நிலவியது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 20 கிலோகிராம் சிவப்பு அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகித்ததால் சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 20 கிலோகிராம் சிவப்பு அரிசி மாத்திரம் வழங்கப்படவில்லை. நாடு, வெள்ளை பச்சையரிசி வழங்கப்பட்டது. 

அத்துடன் ஒட்டுமொத்த மக்களும் 20 கிலோ கிராம் அரிசி வழங்கப்படவில்லை. சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையிலும், குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மாத்திரமே நிவாரணம் வழங்கப்பட்டது.

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிடும் விடயங்கள் முற்றிலும் பொய்யானவை.  பிரதான அரிசி உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் அடிபணிந்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு விலை நிர்ணயிப்பதிலும் பிரச்சினை  காணப்படுகிறது. அரிசி தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20