பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கடந்த சனிக்கிழமை (11) ஹங்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் ஹங்வெல்ல - தும்மோதர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தும்மோதர பிரதேசத்தில் வசிக்கும் 27, 28 மற்றும் 35 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், 27 மற்றும் 35 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் ஹங்வெல்ல,மீகொடை, அத்துருகிரிய,ஹோமாகம மற்றும் கொட்டாவை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 28 வயதுடைய சந்தேக நபர் திருடிய நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை விற்பனை செய்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து நகைகள் , மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM