ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இரு சீனப் பிரஜைகள் கைது

14 Jan, 2025 | 07:03 PM
image

ஒரு கோடியே 74 இலட்சத்து 50 ஆயிரத்து 875 ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 வயதுடைய தந்தையும் 21 வயதுடைய மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் இரவு 07.3 மணியளவில் சீனாவின் சோங்கிங் நகரத்தை நோக்கிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால்  சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

சோதனையில் சந்தேக நபர்கள் அணிந்திருந்த ஆடைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக் கற்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1,200க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக...

2026-04-20 12:25:45
news-image

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல்...

2026-04-20 12:18:26
news-image

பலாங்கொடையில் நபரொருவர் அடித்துக் கொலை

2026-04-20 12:09:48
news-image

இந்திய வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்டார் இந்திய...

2026-04-20 12:08:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17