(எம்,ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் சுற்று நிருபம் மூலம் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்களுடன் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வரையறை விதிக்கப்பட்டிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தினால் ஜனவரி முதலாம் திகதியிட்டு வெளியிடப்படுள்ள சுற்று நிருபம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலாளரினால் 2025 ஜனவரி முதலாம் திகதி சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் வெளிநாட்டு தூதுவர்களோ வெளிநாட்டுகளில் இருந்து விசேட அதிகாரிகள் வரும்போது அவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலை வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் அங்குவந்து அதனை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவோ அல்லது ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடவோ எந்த ஒரு அமைச்சருக்கும் ஆளுநருக்கும் அதிகாரம் இல்லை. அதேபோன்று வெளிநாட்டு தூதுவர்கள் அல்லது வெளிநாட்டு அதிகாரிகளால் விடுக்கப்படும் இரா போசன நிகழ்வு மற்றும் விழாக்களுக்கான அழைப்புகளை அமைச்சர்கள் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதிப்படுத்த வேண்டும் என குறித்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள் அமைச்சர்களை சந்திப்பதாக இருந்தால், அதற்கு வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்து நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபத்தை பார்க்கும்போது சிரிப்பும் வருகிறது, அதேநேரம் கவலையாகவும் இருக்கிறது. ஏனெனில் இவ்வாறான கட்டுப்பாடுகள் வட கொரியாவில்கூட இல்லை என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM