(நமது நிருபர்)
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து புதிய தேசிய அடையாள அட்டைகளும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்படவுள்ளது.
அடையாள அட்டைகளைப் பெறுவதில் தற்போது ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க தாமதங்களை நிவர்த்தி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
டிஜிட்டல் அடையாள அட்டை முறையை செயல்படுத்துவதற்கான செலவீனமாக 20 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
அச்செலவீன நிதிச் சுமையைக் குறைப்பதற்காக இந்தியாவின் நிதியுதவி பெறப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM