(எம்.வை.எம்.சியாம்)
ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த அழைப்பு உள்ளிட்ட இதர அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைவது குறித்தான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு பிரதான தேசியத் தேர்தல்களின் அடைவு மட்டத்தை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வது சிறந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் ஐக்கிய மக்கள் சக்திக்கு, ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள திறந்த அழைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி- ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைக்க கலந்துரையாடல்கள் இடம்பெறுகிறதா?
பதில் - ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமல்ல இதர அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைவது குறித்து கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம்.
குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம்.
எனவே இவ்விரு கட்சிகளிலும் உள்ளவர்கள் தங்களது தற்போதைய அரசியல் நிலைமை என்ன என்பது தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டும். எதேட்சதிகாரமாக செயற்படாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.
கேள்வி-இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைந்தால் தலைமைத்துவத்தில் சிக்கல் நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது அல்லவா?
பதில் -அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.அதில் மாற்றுக் கருத்தில்லை. ஐக்கிய மக்கள் சக்தியே பிரதான எதிர்க்கட்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் அடைவை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வது சிறந்தது.
அவ்வாறில்லையெனில் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM