இலங்கைக்கும் உலகுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஒன்றுபடுவோம் ; பொங்கல் வாழ்த்தில் விஜித்த ஹேரத்

13 Jan, 2025 | 05:21 PM
image

இலங்கைக்கும் உலகிற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கூட்டு உறுதிப்பாட்டுடன் அனைவரும் ஒன்றிணைந்து, அன்பைத் தழுவி, மனிதநேயத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும் என தனது தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தியில்  வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவ்வாழ்த்துச்செய்திநில் அமைச்சர் விஜித்த ஹேரத் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்திருநாளன்று, எனது மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தைப்பொங்கல் என்பது ஆழ்ந்த சிந்தனை, நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்துக்கான நாளொன்றாகும். அறுவடைக்குப் பங்களிப்பவர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பை மரியாதை செய்யும் இத்தருணத்தில், இயற்கை, விவசாயம் மற்றும் நமது சமூகங்களின் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையிலான ஆழமான தொடர்பை நாம் நினைவுகூருகிறோம்.

பயபக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் புத்துணர்ச்சி நிறைந்த இக்கொண்டாட்டமானது, அறுவடை காலத்தின் தொடக்கத்தை மட்டுமல்ல, சூரியனின் வடக்கு நோக்கிய சஞ்சாரத்தையும் குறித்து நிற்கிறது. இது பிறக்கின்ற தமிழ்ப்புத்தாண்டிற்கான புதிய தொடக்கங்களையும், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையையும் அறிவிக்கிறது.

ஆயிரமாண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டுவரும் தைப்பொங்கல் திருநாளானது, பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் நீடித்த வலிமைக்கு சான்றாகத் திகழ்கிறது.

இலங்கைக்கும் உலகிற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கூட்டு உறுதிப்பாட்டுடன் அனைவரும் ஒன்றிணைந்து, அன்பைத் தழுவி, மனிதநேயத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும். 

தைப்பொங்கலின் உணர்வு, நமது தேசத்தின் செழிப்புக்கும், மக்களின் நலனுக்கும் பகிரப்பட்ட பொறுப்புணர்வை வளர்ப்பதற்காக, அனைத்துப் பிரிவினைகளையும் கடந்து, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்க நம்மை வரவேற்கிறது.

இத்தைப்பொங்கல் திருநாளானது, ஒவ்வொரு வீட்டிற்கும் அமைதி, செழிப்பு மற்றும் அபரிமிதமான மகிழ்ச்சியைக் கொண்டுவருவதுடன், நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் நிறைந்த எதிர்காலத்தை நோக்கித் தொடர்ந்தும் நம்மை ஒன்றிணைந்து பணியாற்ற ஊக்குவிக்கட்டும். 

இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகத்திற்கு ஆசீர்வதிக்கப்பட்ட, வளமான மற்றும் அர்த்தமுள்ள தைப் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20