ஒரு நாட்டின் மக்களுக்கான பொறுப்பை ஏற்றுள்ள ஆளும் கட்சிக்கு, பொதுமக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது, அந்த அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு செலுத்தப்படும் நன்றி மற்றும் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் என்பதை தைப்பொங்கல் விழாவின் உட்பொருளை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் உணரலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது தைப் பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தைப்பொங்கல் என்கிற அறுவடைத் திருவிழா உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். மரபு ரீதியாக அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றியுணர்வு மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. தைப்பொங்கலின் உண்மையான பொருளை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
விவசாய வாழ்க்கை முறையில், ஒருவரின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் வலுப்படுத்தி, பயிர்களை செழிப்பாக்க உதவிய சூரியன், மழை, இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், நன்றி செலுத்துதல் என்ற பெரிய பாடம் கற்பிக்கப்படுகிறது, இதனை எதிர்கால சமுதாயத்தில் முறையாக உள்வாங்குவது நமது பொறுப்பாகும்.
ஒரு நாட்டின் மக்களுக்கான பொறுப்பை ஏற்றுள்ள ஆளும் கட்சிக்கு, பொதுமக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது, அந்த அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு செலுத்தப்படும் நன்றி மற்றும் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் என்பதை தைப்பொங்கல் விழாவின் உட்பொருளை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் உணரலாம்.
ஆரம்பத்தில் விவசாய சமூகத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த விழா, இன்று இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தமிழ் மக்களின் தேசிய விழாவாக மாறியுள்ளது.
பல்மத, பல்லின, பல்மொழி சமூகம் கொண்ட நமது தாய்நாட்டில், பன்முகத்தன்மையில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் மற்றொரு தேசிய விழாவாக தைப்பொங்கல் விழாவை ஒன்றிணைந்து கொண்டாடுவது நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர சகோதரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM