வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன் மூலம் அழகான வாழ்க்கைக்கு வித்திடுவோம் - தைப்பொங்கல் வாழ்த்தில் பிரதி அமைச்சர் பிரதீப்

13 Jan, 2025 | 06:17 PM
image

வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன் மூலம் அழகான வாழ்க்கைக்கு வித்திடுவோம் என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்  தைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தைப்பொங்கல் வாழ்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"

என்று மகாகவி பாரதி பாடியதிலிருந்து  நாங்கள்  உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமையை வழங்கி வந்துள்ளோம் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

 தேசிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கம் எமது தாய் திருநாட்டில் கடந்த காலங்களில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்காத விவசாயத் துறையினை மேம்படுத்தி அதற்கான முன்னுரிமையினை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதாகும், 

அதன் அடிப்படையில் , ஐம் பூதங்களுடன் உழவுத் தொழிலுக்கு பெரிதும் கைகொடுக்கும் பசு முதலிய உயிரினங்களுக்கும் , இயற்கைக்கும், மனிதருக்கும் இடையிலான வலிமையான உறவினை மென்மேலும் மெருகூட்டி அதனை எம் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு அன்று முதல் இன்று வரை இயற்கை அன்னைக்கும் சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் முகமாக உலகமெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள்பன்னெடுங்காலமாக நன்றி செலுத்தும் பெருநாளாக  இவ் உழவர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு தைத்திருநாள் இலங்கை வாழ்  அனைத்து மக்களுக்கும் செளபாக்கியம் நிறைந்த ஒரு ஆண்டாகவும்,  பொங்கும் இனிய பொங்கல் போல் யாவரதும் உள்ளம்  பூரிப்படைந்து அனைவரது இல்லங்களிலும் எண்ணங்களிலும் மகிழ்ச்சி பெருகட்டும்.  

நம் முன்னோர் வாக்குப் எண்ணப் படி 'தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது, மக்கள் மனதில் தொன்று தொட்டு இருந்து வரும் உறுதியான நம்பிக்கையாகும். 

அந்த நம்பிக்கை  அனைத்து உறவுகள் மத்தியிலும் கைகூடும் வகையில் மலர்ந்திடும் இந்த தைத்திருநாளை,  நம்பிக்கையோடு எதிர் கொண்டு வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன் மூலம் அழகான வாழ்க்கைக்கு வித்திடுவோம்.

பசி போக்கிடும் படைப்பாளியாம் உழவருக்கு ஒரு திருநாள்,உலகம் போற்றும் நன்னாள் இந்த நாளில் தைத்திருநாளை கொண்டாடும் உலக வாழ் அனைத்து தமிழர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி பொங்கட்டும் மனதிலே ஆனந்தம் பொங்கட்டும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பை...

2026-06-06 13:00:59
news-image

சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில்...

2026-06-06 13:07:05
news-image

காலியில் பணம் மற்றும் அதிக போதை...

2026-06-06 12:59:07
news-image

மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து...

2026-06-06 12:41:59
news-image

மீகொடை தானசாலை விபத்து: வாகன உரிமையாளர்...

2026-06-06 12:36:25
news-image

வடமாகாணத்தின் மின்விநியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில்...

2026-06-06 13:08:09
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள்...

2026-06-06 12:01:54
news-image

மீகொடை தானசாலை விபத்து: தப்பியோடிய மூவரைக்...

2026-06-06 12:38:33
news-image

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது :...

2026-06-06 11:28:18
news-image

கடல் வளப் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில்...

2026-06-06 11:02:10
news-image

யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி குறித்து...

2026-06-06 10:32:17
news-image

முன்னாள் அமைச்சரின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால்...

2026-06-06 10:29:22