ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் - இந்துக் குருமார் அமைப்பின் தைப்பொங்கல் வாழ்த்து 

13 Jan, 2025 | 06:21 PM
image

இனியவை நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சுபமங்களம் உண்டாகட்டும் என இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம். 

இந்துக் குருமார் அமைப்பு சார்பில் அதன் தலைவர் "சிவாகமகலாநிதி". சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள் மற்றும் அதன் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள் ஆகியோர் இணைந்து அனுப்பி வைத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். இன்று மங்கலச்சிறப்புடன் தைத்திங்கள் மலர்ந்துள்ளது. ஒரு இனத்தின் அல்லது ஓர் குழுவினருடைய பண்பாட்டினையும் கலாசார விழுமியங்களையும் தொண்மையையும் அவர்கள் கடைப்பிடித்து வரும் விழாக்கள் பண்டிகைகள் ஊடாக நாம் அறிந்து கொள்ள முடியும். 

தமிழர்களின், 

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை என்பன கூறி நிற்கின்றன. 

பொங்கல் திருநாள் தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினையும் பிரதானமாக எடுத்துக் காட்டுகின்றது.

பல்வேறு சிறப்புகளை தன்னகத்தேயுடைய தமிழ் மக்கள் பல இன்னல்களை, துன்பங்களை சுமந்தவர்களாவே காணப்படுகிறாகள். தற்காலத்தில் எமது இளம் சமுதாயத்தில் பல்வேறு புறழ்வுகளை காண்பது வேதனையே.

இவற்றிலிருந்து நாம் மீண்டு உயர்வு பெற இறை பிரார்த்தனையுடன் தன்னம்பிக்கையும் அவசியமாகும். இறை வழிபாட்டையும் திருமுறைகளின் உயர்வினையும் எமது இளம் சமூகத்தினருக்கு அதிகம்  வழங்குவோம். 

இனியவை நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சுபமங்களம் உண்டாகட்டும் என இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31