மார்கழி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்களுள் ஒன்றாக காணப்படும் திருவெம்பாவை விரதத்தின் தீர்த்தோற்சவமும், ஆருத்ரா அபிசேக திருவிழாவும், கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து நடராச மூர்த்தியோடு சேர்ந்த சிவகாமி அம்பாள் சமதேரராய் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பின்னர் உள் வீதி உலா வருதல் நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (13) அதிகாலையில் விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, நடராச மூர்த்தியோடு சேர்ந்த சிவகாமி அம்பாள் சமதேரருக்கு ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று சமுத்ர தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இவ்வாலயத்தில் திருவெம்பாவை காலத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆலய கிரியை, பூஜை வழிபாடுகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ நவரத்ன முரசொலி மாறன் குருக்கள் தலைமையிலான குருமாரினால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM