சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை (14) முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் சீன இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.
இதன்போது சீனாவில் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதோடு பல உயர்மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளின்போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவினை மேலும் வலுப்படுத்துவதில் ஜனாதிபதியின் சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் ஊடாக இரு தரப்புகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM