மாத்தறை,தெவிநுவர, தல்பாவில பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கந்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கருவாடு விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் குறித்த வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகரின் வீட்டின் மேற்கூரை சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வர்த்தகரின் வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM