பருத்தித்துறையில் நீதிமன்றுக்கு அருகில் பட்டாசு கொளுத்திய இருவர் கைது

12 Jan, 2025 | 07:26 PM
image

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக பட்டாசு கொளுத்திய இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பகுதியில் உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, நீதிமன்றுக்கு அருகில் அதிக சத்தமான பெருமளவான வெடிகளை வெடித்தமையால், சத்தம் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் சுமார் 30 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் பட்டாசு வெடித்த  குற்றச்சாட்டில் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பதிவு செய்தனர். 

வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்களுக்கு எதிராக 15ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும், அன்றைய தினம் மன்றில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தி இருவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56