வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புவக்கஹவத்த பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொட பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரு வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போதே நேற்று சனிக்கிழமை (11) இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் மற்றும் 45 வயதுடைய ஆண் என இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 11 கிராம் 720 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் 565 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM