மூதூரில் மக்களின் காணிகள் கடற்படை முகாமிற்காக சுவீகரிக்க நடவடிக்கைக

Published By: Digital Desk 2

12 Jan, 2025 | 07:32 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மயானத்திற்குரிய காணி உட்பட 60 ஏக்கருக்கும் மேற்பட்ட மக்களுடைய காணிகளை அபகரித்து அப்பகுதியில் கடற்படை முகாமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டில் ஏற்பட்ட உள்றாட்டு யுத்தம் காரணமாக 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்கரைச்சேனை உள்ளிட்ட பல கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். பின்னர் மீண்டும் மீள குடியமர்த்தப்பட்டபோது குறித்த காணிகள் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகவும் அதன்பின்னர் இது தொடர்பாக மூதூர் பிரதேச செலகத்தில் கூட்டம் நடைபெற்று வந்ததாகவும் அதில் குறித்த காணிகளை குறித்த கடற்படை முகாமிற்கு வழங்குமாறும் அதற்காக இழப்பீடு தருவதாகவும் தெரிவித்ததோடு இழப்பீடு வேண்டாம் காணிதான் வேண்டும் என கூறியபோது பாட்டாளிபுரம் பால் பண்ணைக்கு அண்மித்த பகுதியில் காணி தருவதாக கூறியதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். 

இருப்பினும் கடற்கரைச்சேனை மண் மிகவும் வளமான மண் என்பதால் தமது பகுதியில் எங்கேயாவது மாற்றுக் காணி வழங்குமாறு காணி இழந்த மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அப்பகுதியில் அரச காணி இல்லையென அரச தரப்பில் இருந்து பதில் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் 11 பேருக்கு சொந்தமான தனியார் காணிகளை பரகும்பா கடற்படை முகாமிற்கு சுவீகரிக்கப்படவுள்ளதாக மூதூர் பிரதேச செயலாளரினால் 23.10.2024 அன்று எழுத்து மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சம்பந்தப்பட்டோர் தமது எதிர்ப்பினை எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும், எதிர்வரும் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமது பிரச்சினை ஆராயப்பட்டு சரியான தீர்வு பெற்றுத்தர வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த 2024.03.11 அன்று வெளியிடப்பட்ட 2375/08 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் அருட்தந்தை ஜோகிம் இம்மானுவேல், கதிர்காமத்தம்பி ஆனந்தராசா, விநாயகமூர்த்தி கருணாகரன், நாகரெட்ணம் சந்திரசேகரம், செல்வராசா கோணேஸ்வரன், கோபாலப்பிள்ளை கணேஸ், திருமதி கதிர்காமத்தம்பி சிவபாக்கியம், திருமதி கதிர்காமத்தம்பி நேசபாக்கியம், கதிர்காமத்தம்பி இராசலிங்கம், கதிர்காமத்தம்பி உதயராசா ஆகிய 11 பேருடைய 7.4004 ஹெக்டேயர் காணியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18
news-image

அலோசியஸிடமிருந்து நிதிபெற்ற அரசியல்வாதிகளின் பட்டியல் விரைவில்...

2025-03-20 15:19:36
news-image

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார்...

2025-03-20 16:52:31
news-image

நுவரெலியா மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல்...

2025-03-20 17:42:10
news-image

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை

2025-03-20 17:27:21
news-image

யாழில் 11 கட்சிகளும் 27 சுயேட்சை...

2025-03-20 17:37:44