கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வெவ்வேறு மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போதே இவர்கள் நேற்று சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து தனித்தனியே 11 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 11 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின், 06 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21, 25 மற்றும் 28 வயதுடைய கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM