தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் வீதியை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை 

12 Jan, 2025 | 02:04 PM
image

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தாயிப் நகர் கோயிலடி, வைத்தியசாலை வீதி சீரின்றி மோசமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

அவ்வீதியானது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின்போது அபிவிருத்தி செய்யப்பட்டது.

அப்போது அவ்வீதியில் தார் காபட் இடப்பட்டபோதும் வீதியின் ஒரு பகுதி பாரிய குன்றும் குழியுமாக காட்சியளிக்கிறது. 

அத்துடன் அண்மையில் ஏற்பட்ட கன மழை காரணமாக அவ்வீதியின் சில பகுதிகள் உடைந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடுவது கடும் சிரமமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் கொண்ட அவ்வீதி ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார், அரச ஊழியர்கள் உட்பட பலரும் பயணித்து வருகின்றனர். 

வீதியில் காபட் இடப்பட்டபோதிலும் திட்டமிடப்படாத அபிவிருத்தியால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். 

வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக மேற்கொள்ளப்பட்ட அவ்வீதி புனரமைப்பு தொடர்பான விடயங்கள் தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்னாள் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச். தாலிப் அலியால் முன்வைக்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஒருவர், குறித்த வீதியில் சிறிய பாலமொன்று அமைக்கப்பட வேண்டும் என்றார். 

பல வருடகாலமாக இந்த சபை பொழுதுபோக்காக இயங்கிவருவது வருத்தமளிக்கிறது என்றும் வீதி தொடர்பான பிரச்சினைகளுக்கு புதிய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அவ்வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 16:30:43
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44