முந்தல் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Published By: Digital Desk 2

12 Jan, 2025 | 01:27 PM
image

புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துலு ஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையமொன்றில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் சிலாபம் விஜயகடுபொத பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.

இந்த நபர் மேற்படி நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டுள்ளார்.

மறுநாள் காலை, அலுவலக ஊழியர்கள் வந்து பார்த்தபோது, அவர் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும் அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட 14 இலட்சம் ரூபா திருடப்பட்டுள்ளதாகவும் நிறுவன உரிமையாளர் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (11) பத்துலு ஓயா பிரதேசத்தில் முந்தல் பொலிஸ் நிலைய அதிகாரிகளாலும் புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரிடமிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141,000/= ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 37 வயதுடைய பத்துலு ஓயாவைச் சேர்ந்த அதே நிறுவனத்தின் ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06