(எம்.மனோசித்திரா)
சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் இன்று சனிக்கிழமை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்நிறுவனம் நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலைகள் 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, கப்ஸ்டன் மற்றும் ஜோன் பிளேயர் சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவாலும் மற்றும் டன்ஹில் மற்றும் கோல்ட் லீவ் சிகரெட்டுகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் மனுபானங்களின் விலைகளை 6 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேஷ சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 7,244 ரூபாவாகும்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு, மொலேசஸ், பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயத்திற்கு விதிக்கப்படும் வரி 7,752 ரூபாவாகும்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 7,969 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் நேற்று முதல் திருத்தப்பட்டுள்ளன. இப்புதிய வரித் திருத்தங்களால், 3,580 ரூபாவாக இருந்த ஒரு போத்தல் அதி விசேஷ சாராயத்தின் விலை 102ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,850 ரூபாவாக இருந்த ஒரு போத்தல் தென்னஞ் சாராயத்தின் விலை 109ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4,000ரூபாவாக இருந்த பழைய சாராய போத்தல் ஒன்றில் விலை 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 4,250 ரூபாவாக இருந்த அதிவிசேஷ பழைய சாராய போத்தல் ஒன்றில் விலையும் 109ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செறிவு குறைந்த பீர் போத்தல் ஒன்றின் விலை 30ரூபாவாலும், செறிவு கூடிய பீர் போத்தல் ஒன்றின் விலை 40ரூபாவாலும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு விஸ்கி போத்தல் ஒன்றின் விலையும் 100ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அவற்றின் செறிவின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM