மாத்தறை, வெலிகம , மஹநெவிய வீதியில் கடந்த 04 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (09) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மாத்தறை, வெலிகம பிரதேசத்திற்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர், மாத்தறை சிறைச்சாலையில் கடந்த 01 ஆம் திகதி மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் உயிரிழந்த கைதி ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஐந்து பேர் அடங்கிய குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து,பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் மாத்தறை பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரிகள் காரில் தப்பிச் செல்வதற்கு உதவி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM