சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

09 Jan, 2025 | 04:30 PM
image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கடந்த திங்கட்கிழமை (06) சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். 

இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது, (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை உறுதிப்படுத்தினார். 

பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், சபாநாயகருக்கு இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கை பாராளுமன்றத்துக்கு ஒத்துழைக்கும் வகையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற பணியாளர்களுக்கும் இந்தியாவினால் பயிற்சி மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

அத்துடன், பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கு சபாநாயகரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயனுள்ள கொள்கை வகுப்பில் பெண்களின் பங்கை மேம்படுத்தவும் இரு பாராளுமன்றங்களின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் குழுக்களிடையே நெருக்கமான தொடர்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான நட்புறவை நினைவுபடுத்திய சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன, பல்வேறு துறைகளில் இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆதரவுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். 

இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பொருளாதார மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

2025-02-13 15:52:58
news-image

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம்...

2025-02-13 15:46:20
news-image

ராகமவில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-13 15:33:30
news-image

வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த...

2025-02-13 15:36:23
news-image

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்று...

2025-02-13 15:15:29
news-image

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து...

2025-02-13 15:30:19
news-image

ஊடகவியலாளர் லசந்த படுகொலை : 3...

2025-02-13 14:49:33
news-image

மீகொடையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ்...

2025-02-13 14:48:25
news-image

காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலகல் - அதானி...

2025-02-13 14:33:51
news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து காயப்படுத்திய...

2025-02-13 14:56:50
news-image

கைவிடப்பட்ட நிலையில் கடுகண்ணாவை புகையிரத அருங்காட்சியகம்

2025-02-13 14:55:22