இலங்கை கடற்படை வசம் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடி படகுகளில் 42 படகுகளை விரைவில் விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையின் நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக்கொண்டால் இவை உடனடியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் மட்டும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறினால் தொடர்ந்தும் கைதுகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த காலத்தில் இந்திய மீனவர் தரப்புடன் இலங்கை அரசியல் தரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. அதேபோல் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.அதற்கமைய இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இணக்கப்பாடு அடிப்பைடயில் சில காரணிகளை ஏற்றுக்கொண்டுள்ளோம்.
குறிப்பாக இலங்கை கடல் எல்லையில் இந்திய தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இலங்கையின் வடபகுதி மீனவர்களை பெரிதும் பாதித்திருந்த நிலையில் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எமக்கு முறையிட்டிருந்தனர்.
அதற்கமையவே நாம் இந்திய தரப்புடன் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் எமது கோரிக்கைகளை இந்திய தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர், குறிப்பாக சட்டவிரோதம் என கருதி இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமையில் எக்காரணத்தை கொண்டும் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிகளை மேற்கொள்ள கூடாது என்பதையும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என நாம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளோம்.
அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கு அமைய தடுத்துள்ளனர். அந்த வகையில் அண்மைக் காலமாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி ஐம்பது வீதத்தினால் குறைவடைந்துள்ளது. இது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நாம் எந்த சந்தர்ப்பத்திலும் எமது மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டே செயற்பட்டு வருகின்றோம்.
மேலும் இலங்கையின் வசம் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களின் கோரிக்கைகளுக்கமைய 42 படகுகளை விரைவில் விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய தூதரகத்திற்கு இந்த தகவலை நாம் தெரிவித்துள்ளோம். எனினும் எமது நிபந்தனைகளுக்கு அமையவே இவை விடுவிக்கப்படும். எமது நிபந்தனைகளை மறுக்கும் பட்சத்தில் படகுகளை மீளவழங்கும் தீர்மானம் நிராகரிக்கப்படும்.
அதேபோல் படகுகளை நாம் மீண்டும் வழங்குகின்றோம் என்பதற்காக இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்ற மாட்டோம் என்று அர்த்தம் இல்லை. இப்போது படகுகளை கொடுத்தாலும் எமது எல்லைக்குள் அத்துமீறும் படகுகளை நாம் தொடர்ச்சியாக கைப்பற்றுவோம். இந்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM