குற்றச்செயல் ஒன்றில் ஈடுபடுவதற்காக முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
ஹங்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் ஹங்வெல்ல பிரதேசத்தில் இரவு நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, முச்சக்கரவண்டியில் இருந்த இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் 05 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 35 மற்றும் 49 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நபரொருவரை சுட்டுக் கொலை செய்வதற்காகத் தயாராக இருந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM