எம்மில் சிலருக்கு திடீரென்று மயக்கம் ஏற்படும். அந்த மயக்கம் சில மணி தியாலங்கள் வரை கூட நீடிக்கும். இந்த தருணத்தில் அவர்களுக்கு வலிப்பு தாக்கங்கள் கூட ஏற்படக்கூடும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால்.. அவர்களுக்கு இன்சுலினோமா எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதற்கு தற்போது நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்க இயலும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எம்முடைய உடலில் உள்ள கணையம் எனும் உறுப்பில் தான் இன்சுலின் சுரக்கிறது. இந்த இன்சுலின் உங்களின் ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. நீங்கள் பசியாறிய பிறகுதான் இன்சுலின் சுரக்கும். ஆனால் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கணையத்தில் கட்டி ஒன்று ஏற்படும். இந்த கட்டியை தான் மருத்துவ மொழியில் இன்சுலினோமா என குறிப்பிடுகிறார்கள். இந்த கட்டி ஒருவரின் கணையத்தில் இருந்தால் அவர்களுடைய உடலில் இயல்பான அளவைவிட அதீத அளவில் இன்சுலின் சுரக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட குறைந்துவிடும். இது மயக்கத்தை உண்டாக்கும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இத்தகைய பாதிப்பு ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. மரபணு குறைபாடு காரணமாகவே இத்தகைய கட்டி பாதிப்பு ஏற்படுவதாகவும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
குழப்பம், வியர்வை, பலவீனம், சமச்சீரற்ற இதயத் துடிப்பு, ரத்த சர்க்கரையின் அளவு குறைவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் இத்தகைய பாதிப்பு உண்டாகும். மேலும் இத்தகைய இன்சுலினோமா அரிதானவை. பெரும்பாலும் இத்தகைய கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ட்ரான்ஸ் அப்போமினல் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எண்டோஸ்கோபிக் அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் ஆகிய பரிசோதனையின் மூலம் இன்சுலினோமா கட்டி பாதிப்பின் தன்மையையும், வீரியத்தையும் துல்லியமாக அவதானிக்கலாம். அதனைத் தொடர்ந்து லேப்ராஸ்கோபிக் சத்திர சிகிச்சை மூலம் அத்தகைய கட்டியை அகற்றி நிவாரணம் அளிக்கலாம். இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
வைத்தியர் பழனியப்பன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM