"பைத்தியம் பிடித்தவரிடம் அணுஆயுதங்கள்" என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்ட்டேவுடனான தொலைபேசி உரையாடலின்போது கிம் ஜோங் உன்னை பைத்தியம் பிடித்தவர் என தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைக்களுக்கெதிராக உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை என்பன விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில், அமெரிக்கா தனது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அந்நாட்டு போர்க்கப்பல்களை கொரிய தீபகர்பத்திற்குள் அனுப்பியது.
இந்நிலையில் பதற்ற நிலை சற்று தனியவே, கிம் ஜோங் உன்னை சந்திக்கத் தயாராகவுள்ளதாகவும், அவருடனான சந்திப்பை மேன்மையானதாக கருதுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இச்சூழலில் வடகொரிய ஜனாதிபதியை பைத்தியம் பிடித்தார் என்றும், "அணுஆயுதங்களை வைத்திருக்கும் பைத்திய நிலையிலுள்ள ஒருவரால் தம் அசந்து போகாது அதைவிட பலமான ஆயுதங்களை தம் வைத்திருப்பதிகாக" பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியிடம், டிரம்ப் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM